Search This Blog

Saturday, 22 February 2014

பிரம்ம முகூர்த்த வேளையின் சிறப்பு தெரியுமா

பிரம்ம முகூர்த்த வேளையின் சிறப்பு தெரியுமா?

விடியற்காலம் 4.30 முதல் 6.00 மணி வரையுள்ள நேரம் பிரம்ம முகூர்த்தம். இரவு என்பது மனிதன் உட்பட எல்லா ஜீவராசிகளும் உறங்கும் நேரம். அப்போது உலக இயக்கமே தளர்ந்து விடும். விடியற்காலையில் குயில், சேவல் போன்ற பறவைகள் கூவுகின்றன. உலக இயக்கம் சுறுசுறுப்பு அடைகிறது. ஒவ்வொருநாளும் சிருஷ்டியாகும் விடியற்காலைப் பொழுதை, சிருஷ்டி கடவுளான, பிரம்மாவின் பெயரால் பிரம்ம முகூர்த்தம் என்று அவர் பெயரில் சாத்திரங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் குளித்து விட்டு வழிபாடு செய்தால், நாள் முழுதும் வெற்றியே. தொடக்கம் நன்றாக இருந்தால், முடிவும் நன்றாகத் தானே இருக்கும்.
  

No comments:

Post a Comment