Search This Blog

Friday, 21 February 2014

சந்திராஷ்டம நாளில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

சந்திராஷ்டம நாளில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமம். இது மொத்தம் 56 மணி நேரம். அதாவது இரண்டே கால் நாட்கள் நீடிக்கும். இதுபற்றி பயப்பட வேண்டாம். மாதத்திற்கு ஒருமுறை தான் இது வரும். இந்த சமயத்தில் மனதில் கோபத்தை உண்டாக்கும் சூழல் உண்டாகும். வீண் சண்டை, சச்சரவு ஏற்படும். செய்ய வேண்டியது விநாயகர் வழிபாடு. செய்யக் கூடாதது புதிய முயற்சி, சுபவிஷயம், விருந்து உபசரிப்பு ஆகியன. மவுனத்தைக் கடைபிடித்தால் பிரச்னை  குறையும். அன்று உங்கள் கடமைகளைச் செய்யும் முன் பெற்ற தாயிடம் ஆசி பெறுவதும், குலதெய்வத்தை வழிபடுவதும் சிறந்த பரிகாரங்களாகும்.
  

No comments:

Post a Comment