Search This Blog

Thursday, 20 March 2014

விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது?

விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். நாள் முழுக்க தெய்வசிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது விரதம். பசி என்ற நினைப்பு வரும்போதெல்லாம் தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம் என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு உபவாசம் (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால், பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம்.
  

No comments:

Post a Comment