Search This Blog

Tuesday, 4 March 2014

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது கட்டாயமா?

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது கட்டாயமா?

சுவாமிக்கு சாத்தப்படும் அஷ்ட பந்தன மருந்துக்கு, அவ்வளவு தான் வலு. பிறகு ஜீரணிக்கத் தொடங்கி விடும். நம் வீட்டை அடிக்கடி புதுப்பித்து வர்ணம் தீட்டுகிறோம். இறைவன் குடியிருக்கும் கோயிலுக்கு 12 ஆண்டுக்கு ஒருமுறையாவது கும்பாபிஷேகம் செய்வது புண்ணியமானது. எனவே, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், வர்ணம் தீட்டி புதுப்பித்தல்
இவற்றிற்கு 12ஆண்டு ஒரு காலவரையறையே தவிர, செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால், இதைச் செய்தால் நமக்கும், நாட்டுக்கும் சுபிட்சம் உண்டாகும் என்பது உறுதி.

No comments:

Post a Comment