Search This Blog

Sunday, 2 February 2014

விரதநாளில் குளிக்க முடியவில்லையா?

விரதநாளில் குளிக்க முடியவில்லையா?

முக்கியமான விரதம் வரும் நாளில் தான் பாழாய் போன ஜலதோஷம் வந்து நம்மை குளிக்க முடியாமல் செய்து விடும். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா என்றால், ஒரு சில இருக்கிறது.

* சிவசிவ, ஓம் முருகா, ஓம் சக்தி விநாயக நமஹ, ஓம் சக்தி. ஓம் நமோ நாராயணாய என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ப்ராம்ஹ ஸ்நானம் என்பர்.

* உடலை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை காபில ஸ்நானம் என்பர்.

* உடல் முழுவதும் திருநீறு பூசினால் குளித்ததற்கு சமம். இதை ஆக்நேய ஸ்நானம் என குறிப்பிடுவர்.

* உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து அங்கே பசுவின் குளம்படி பட்ட மண் இருந்தால் அதைப் பூசிக் கொள்ளலாம். இதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர்.

* விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டமிருந்து, நல்ல வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை திவ்ய ஸ்நானம் என்பர். இதில் எதுசாத்தியமோ, அதைக் கடை பிடியுங்களேன்!
 

No comments:

Post a Comment