ஆலயத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
கோயிலில் இருக்கும் மரங்களிலிருந்து இலைகளையோ, பூக்களையோ வீட்டு வழிபாட்டிற்கோ, ஆத்மார்த்த பூஜைக்கோ பயன்படுத்தக் கூடாது. சுவாமிகளுக்கு
அபிஷேகம், நிவேதனம் நடக் கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது.
பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில் ஆலயத்தில் வந்து சேவிப்பது, முதல் அபச்சாரம். பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது.
வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்லலாகாது.
ஒருவரைக் கெடுப்பதற்காகக் கோயிலுக்குச் செல்வதோ, அர்ச்சனை, அபிஷேகம் நடத்துவதோ அபச்சாரமாகும்.
கறுப்பு ஆடை அணிந்து கொண்டு பூஜை செய்வதும் கோயிலுக்குச் செல்வதும் கூடாது.
ஆண்கள் சிவப்பான ஆடையை அணிந்து செல்லலாகாது. பெண்களுக்கு சிவப்பு சிறந்தது.
பூஜை செய்யும்பொழுது பிறருடன் பேசுவது தவறு.
இருட்டில் பகவானை வணங்குதல் ஆகாது. இருட்டில் பூஜை செய்யவும் கூடாது.
குளிக்காமலோ, கால் கழுவாமலோ, பாதுகையுடனோ ஆலயம் செல்வது குற்றம்.
ஏதேனும் பழம், தேங்காய், புஷ்பம் முதலியவை இல்லாமல் கோயிலுக்குச் செல்லக் கூடாது.
சாஸ்திரம் கூறாத இடத்தில் நமஸ்காரம் செய்தால் மற்ற மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டிய குற்றம் உண்டாகும்.
கோபத்துடன் ஆலயம் செல்வது கூடாது.
முறைப்படி ஸ்நானம் செய்யாமலோ, முறைப்படி வஸ்திரம் அணியாமலோ, நெற்றிக்கு அணியாமலோ செல்வது குற்றமாகும்.
பொதுவாகவே வீட்டில் புசித்து விட்டு அதன் பிறகு ஆலயம் போகலாகாது.
No comments:
Post a Comment