திருப்பதி கோயிலில் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு
திருமலை : திருப்பதி கோயிலில் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை, ‘ஸ்கேனிங்’ செய்த பிறகே பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர். நேற்று முன்தினம் ஸ்கேனிங் செய்த டிக்கெட்டுகள் பலமுறை சுழற்சி முறையில் வந்ததை அறிந்த விஜிலென்ஸ் அதிகாரிகள், சி.சி.கேமரா ஆபரேட்டர் சைதன்யாகுமாரிடம் விசாரித்தனர். அவரிடம் 46 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யாமல் இருக்க, அவற்றின் மீது தண்ணீர் ஊற்றி மீண்டும், மீண்டும் பக்தர்களிடம் கொடுத்து முறைகேடு செய்திருப்பதும், இதில் கண்காணிப்பாளர், உதவி செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment